Friday, July 22, 2011

இந்திய இங்கிலாந்து - கிரிக்கெட் போட்டி - நேரடி ஒளிபரப்பு

இந்திய இங்கிலாந்து க்கு இடையே கிரிக்கெட் போட்டி ஆரம்பம் ஆகிவிட்டது, நீங்கள் எல்லா கிரிக்கெட் மேட்ச் ஐ களையும் லைவ் ஆக தங்களுடைய கம்ப்யூட்டர் / இன்டர்நெட் மூலமாக பார்த்து ரசிக்கலாம். மேட்ச் தொடங்கி விட்டது. மேட்ச் ஒளிபரப்பு மிக்க தொழில்நுட்பம் உள்ளது . தாங்கள் எனது வலைப்பூவின் கீழே இந்த கிரிக்கெட் live stream ஒளிபரப்பை கண்டு ரசிக்கலாம். ஒளிபரப்பு ஸ்க்ரீனில் காணப்படும் ads களை close செய்துவிட்டு மேட்ச் ஐ கண்டு களியுங்கள்,

வரும் மேட்ச் அட்டவணை கீழே ....

July 21, 2011 10:00 GMT India V England ------- 3rd ODI
July 29, 2011 10:00 GMT India V England ------- 4th ODI
August 06, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 1st T20
August 08, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 2nd T20
August 10, 2011 04:30 GMT Australia V Sri Lanka -- 1st ODI
August 10, 2011 10:00 GMT India V England -------2nd Test


Friday, July 15, 2011

ஒரு இந்தியரின் வெளிநாட்டு உண்மை நிகழ்ச்சி

ஒரு இந்தியர் நியூயார்க் நகரில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்க செல்கிறார் . அங்குள்ள கடன் வழங்கும் வங்கி அதிகாரியிடம் சென்று கடன் கேட்கிறார்.


வங்கி அதிகாரி அந்த இந்தியரிடம் எதற்காக கடன்? என்று கேட்க ,


அதற்கு அவர் ...நான் இந்தியா செல்ல வேண்டும் , எனக்கு $ 5,000 கடன் வேண்டும் மேலும் 2 வாரங்கள் இல் கடனை வட்டியும் முதலுமாய் செட்டில் செய்கிறேன் என்கிறார்.



வங்கிகடன் அதிகாரி யோசித்து விட்டு , சரி கடனுக்கு எதாவது பாதுகாப்பு (secuirty) வேண்டும் என்கிறார்.


அதற்கு அந்த இந்தியர், வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ஃபெராரி காரை அடமானமாக வைத்து கடன் தாருங்கள் என்று அந்த கார் சாவி மற்றும் ஆவணங்களை வங்கிகடன் அதிகாரியிடம் தருகிறார்.


வங்கிஅதிகாரி , வங்கி தலைவரிடம் கலந்தாலோசித்து, எல்லா சான்றுகளையும் சரி பார்த்து விட்டு கடைசியில் கடன் தர சம்மதிக்கிறார்.


பரிமாற்றம் முடிந்தது


அந்த இந்தியருக்கு கடன் கொடுத்து அனுப்பிய பிறகு, வங்கி தலைவர் மற்றும் கடன் அதிகாரி இருவரும் வயிறு வலிக்க சிரித்தனர்.


யாராவது $ 5,000 கடனுக்கு $ 750,000 மதிப்பு உள்ள ஃபெராரி காரை அடமானமாக வைப்பார்களா ?


என்ன மாதிரியான முட்டாள்கள் , என்று சிரித்து விட்டு , பிறகு அந்த காரை எடுத்து வங்கியின் கேரேஜ் பகுதியில் நிறுத்தி வைத்தனர்.



இரண்டு வாரங்களுக்கு பிறகு, அந்த இந்தியர் திரும்பி வந்தார் , கடன் $ 5000 மற்றும் வட்டி $ 15.41 இவற்றை திருப்பி செலுத்தினார்.



வங்கிஅதிகாரி , வங்கி தலைவர் மிகுந்த சந்தோசம் அடைந்தனர் ,


அவர்கள் , இந்தியரிடம் , சார் உங்களுடன் நாங்கள் செய்த வரவு செலவு திருப்தியாய் உள்ளது,



நீங்கள் அடமானம் வைத்த காரை பார்த்த போதே , நீங்கள் ஒரு மல்டி மில்லியனர் என்று கண்டுபிடித்து விட்டோம்.


பிறகு ஏன் நீங்கள் எங்களிடம் $ 5000 கடன் வாங்க வந்தீர்கள் ? என்றனர்.


அதற்கு அந்த இந்தியர் சிம்ப்ளாய் ஒரு பதில் சொன்னார்.


நியூயார்க் நகரத்தில் எனது காரை 2 வாரங்களுக்கு எங்கு பார்க் செய்தாலும் அதிகம் கட்டணம் ஆகும் , ஆனால் இங்கு $ 15.41 மட்டுமே என்றார்.

இது ஒரு உண்மை சம்பவம்

அந்த இந்தியர் வேறு யாருமில்லை ... "விஜய் மல்லையா

Saturday, July 2, 2011

லிபியா பற்றிய உண்மைகள் --


பிரபல ஊடகங்கள் வெளியிடாத லிபியா பற்றிய வேறு சில உண்மையான விவரங்களை இங்கே காணலாம்.

- லிபியா நாடு யாருக்கும் கடன் பாக்கி தர வேண்டியது இல்லை .(கடங்கார நாடு இல்லை).

- லிபிய குடிமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு அரசாங்கம் எந்த வட்டியும் வசூலிப்பது கிடையாது.


- லிபிய மக்களுக்கு படிப்பும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்.


- மாணவர்கள் தொழில் படிப்பு படிக்கும் போதே சராசரி சம்பளம் வழங்கப்படுகிறது.


-மாணவர்கள் படித்து முடித்த பின்பு, அந்நாட்டில் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே அவர்களுக்கு முழு சம்பளம் வழங்குகிறது.


-- புதியதாக திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடிகளுக்கு அரசாங்கமே தனியாக வீடோ அல்லது அபார்ட்மெண்ட்டோ இலவசமாக வழங்குகிறது.


- அந்நாட்டு மாணவர்கள் உலகில் எங்கு சென்று படித்தாலும் அரசாங்கம் அவர்களுக்கு 2500 யுரோவும் மற்றும் தங்கும் வசதி படியும் ( அலவன்சு ) , கார் பராமரிப்பு படியும் வழங்குகின்றது.


- அந்நாட்டு மக்களுக்கு கார்கள், தயாரிப்பு விலையிலேயே விற்கப்படுகின்றன.


- மக்கள் தொகையில் 25%.பல்கலைக்கழக பட்டம் பெற்றவரகள்.

-இந்நாட்டில் வீடு இல்லாதவர்களோ பிச்சைக்காரர்களோ கிடையாது.(சமீபத்திய குண்டு வரை).


-இங்கு ஒரு பாக்கெட் ரொட்டி $ 0.15 மட்டும் தான். ( நம்ம ஊர் மதிப்பு படி அஞ்சு ரூபா தான்)

இந்த நாட்டின் பெருமையை கண்டு மற்ற நாட்டினர் பொறாமை படுவது இயற்கை தான். லிபியா ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கியது. இதனால் பெரிய அண்ணன் அமெரிக்கா , மற்றும் பிற வளர்ந்த நாடுகளுக்கு லிப்யா மீது வெறுப்பு தோன்றியது.அவர்களால் லிபிய அதிபர் கடாபி யை IMF லும் , உலக வங்கிகளிலும் கடன் வாங்க வைக்க முடியவில்லை. லிபிய அதிபர் கடாபி ஒரு சர்வாதிகாரியாக இருக்கலாம். அவர் மக்களுக்கு வேண்டியவராய் இருக்கிறார். மேலும் கடாஃபி அனைத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் , பண பரிமாற்றத்தை USD அல்லது யூரோக்களில் செய்ய வேண்டாம் என்றும் எல்லோரும் தங்கத்தின் மூலம் வியாபாரம் செய்யும் படி வலியுறுத்தினார். பெரிய அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது, கடாஃபி தப்பிப்பாரா? அடுத்த சதாம் ஹுசைனா? நாடகம் நடந்து கொண்டிருக்கிறது .

செய்தி தொகுப்புகள்